கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான கொலையாளி நீதிமன்றத்தில் உள் நுழைய பயன்படுத்தப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டை,தப்பிக்க பயன்படுத்ப்பட்ட வாகனம் ஆகியவற்றோடு புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.