குளிர்பானத்தை குடித்த மகளும் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதி !
பலாங்கொடை – கிரிதிகல பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிர்பான போத்தல் ஒன்றைக் கொள்வனவு செய்து அதை அருந்திய பின்னர் திடீர் சுகவீனமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குளிர்பானத்தை குடித்த பின்னர் மயக்கம் மற்றும் வாந்தி காரணமாக 8 வயது சிறுமி நேற்று (12) மதியம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் சுகயீனத்திற்கான காரணத்தை அறிவதற்காக, சிறுமியின் தந்தையும் குளிர்பானத்தில் இருந்து சிறிது குடித்திருந்தார். பின்னர் அவரும் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது சிறுமியும் அவரது தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குளிர்பானத்தை குடித்த பிறகு, அவரது வாய் எரிவது போல் உணர்ந்ததாக தந்தை குறிப்பிட்டார்.
யாழில் காதலர் தினத்தைக் கொண்டாட காதலி மறுப்பு : உயிரை மாய்த்துக்கொண்ட காதலன்
காதலர் தினத்தைக்கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச்சேர்ந்த இளைஞரொருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் ல், அம்பலபொக்கணை பகுதியைச்சேர்ந்த வர்ணகுலராசா பிரதீபன் என்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வருடம் காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று வர அவர் தனது காதலியை பல முறை கேட்டிருந்தார். ஆனால், அப்பெண் அதற்கு சம்மதிக்கவில்லை. அந்த இளைஞன் பலமுறை வற்புறுத்தியதால், அப்பெண் இளைஞன் மீது கோபமடைந்துள்ளார். இதனால் அந்த இளைஞன் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சம்பவம் நடந்த நாளில், அவ்விளைஞன் தனது காதலிக்கு பலமுறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும், ஆனால், பதிலளிக்காமல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனவுளைச்சலுக்குள்ளான இளைஞர், கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை தர்மபுரம் காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தங்கத்தை அருகில் வைத்துக்கொண்டு அர்ஜுனா தாக்கியதில் இருவர் மருத்துவமனையில்
யாழ்ப்பாணம் வலம்புரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனா தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹோட்டலில் உணவு அருந்தச் சென்றபோது, எம்.பிக்கும் இரண்டு பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
சபையில் கூச்சலிட்ட அர்ச்சுனா! அர்சுனா எம்பிக்கு மண்டைப் பிழை!! பாராளுமன்றில் பெரும் சல சலப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நாடாளுமன்ற அமர்வின் போது ஆற்றிய உரையினால் சபை கடுமையான குழப்ப நிலையை அடைந்துள்ளது. அவர் சில,நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையில் விமர்சித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதன்போது, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “உங்கள் அனைவருக்கும் என்னைப் பார்த்தால் பயம்” என்று அர்ச்சுனா எம்.பி சபையில் கடுமையாக கூச்சலிட்டார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பேசும் போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும் , இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை […]
போலிச் செய்தி பகிர்வின் பின்னணியில் அர்ச்சுனாவா?
தற்போது போலியான பிரசுரம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இவ்விடயம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுப்பறிக்கை ஒன்றினை விட்டுள்ளார். சமூக ஊடகங்களில் தற்போது பரப்பப்பட்டு வரும் செய்தியானது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகள் எனவும் பரப்பப்பட்டு வரும் அச்செய்திக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிருக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை எனவும் இது திட்டமிடப்பட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது சேறு பூசுகின்ற ஒரு செயற்பாடு. இது ஒரு கையாலாகாத்தனம் எனவும் இது தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். இவ் போலிப் பிரசுருத்திற்கு பின்னணியில் அர்ச்சுனா இராமநாதன் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இளைஞர்களிடையே பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை !
நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் நோய்கள் அதிகரித்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சங்கத்தின் வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இந்த விடயத்தில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும், இதனால் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் பாதுகாப்பற்ற கர்ப்பங்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர் கூறினார். கொழும்பு விஜேராமாவில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் விந்தியா குமாரப்பெலி “குறிப்பாக பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.யைப் பொறுத்தவரை, இளைஞர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.” 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களின் பயன்பாடு இதற்கு ஒரு […]
வவுனியாவில் தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி!
வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து வீழ்ந்த ஒருவர் பலியாகியுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (02.02) தெரிவித்தனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துவந்த ஊழியர் ஒருவர் நிலைதடுமாறி கீழே வீழ்ந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சத்துரங்க ஹேரத் என்ற இளைஞனே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தடவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
நாடளாவிய ரீதியில் சிக்கன்குனியா பரவும் அபாயம் !
நாடளாவிய ரீதியில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் சிக்குன்குனியா அறிகுறிகளுடன் காய்ச்சல் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார். காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி, மூக்கைச் சுற்றி கருப்பு நிறமாற்றம் போன்றவை சிக்குன்குனியாவின் அறிகுறிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் விரைவில் மருத்துவமனைக்குச் சென்று தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். டெங்குவை பரப்பும் அதே கொசுதான் சிக்குன்குனியாவையும் பரப்புகிறது எனவே கொசுக்கள் பெருகும் இடங்களை அழிப்பது மிகவும் அவசியம் என்றும் நிபுணர் குறிப்பிட்டார்.
திருகோணமலையில் கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு !
திருகோணமலை நகர் கடற்கரையில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் கடற்கரையில் கடந்த 30 ஆம் திகதி நீராடுவதற்கு நண்பர்களுடன் சென்றிருந்த 20 வயதுடைய இளைஞன், அலையில் சிக்குண்டு காணாமற் போயிருந்தார். குறித்த இளைஞன் கடலில் மூழ்கியபோது ஏனையோர் அவரை காப்பாற்ற முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிய குறித்த அனைவரையும் பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டு கரைக்கு கொண்டுவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தேடும் பணிகள் கடந்த 30 ஆம் திகதி இரவு முதல் கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை – சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேருந்தும் வேனும் மோதி விபத்து -இருவர் பலி! 35 பேர் காயம்
ஹபரணை திருகோணமலை பிரதான வீதியில் பேரூந்தும் டொல்பினும் நேருக்கு நேர் மோதிய பாரிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், திருகோணமலை – ஹபரணை வீதியில் கல்மலை பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றும் வேனும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிக்கப்படுகின்ற அதே வேளை பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களுள் வேனை செலுத்திய கிண்ணியா பகுதியை சேர்ந்த இளைஞரும் உள்ளடங்குவதோடு பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளார் இன்று(01) முற்பகல் 10 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



















