அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது..

0
FB IMG 1736410868301.jpg

அடுத்தவர் மனைவி மீது ஆசைப்படும் ஆண்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது.. #கேள்வி: நான் ஒரு பட்டதாரி ஆண். என் கல்லூரி நாட்களில் நான் செய்த குறும்பிற்கு அளவில்லை. என்னைக் கல்லூரியில் நிறைய பெண்கள் விரும்பினர். ஆனால், ஏனோ எனக்கு காதல் பிடிக்கவில்லை. எனக்கு இப்போது 34 வயது. இத்தனை நாட்கள் கட்டுக்கோப்புடன் இருந்த என் மனம், இப்போது சஞ்சலப்படுகிறது. நான் இப்போது ஒரு பெண்ணை விரும்புகிறேன். அவளும், என்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறாள். என் பிரச்னை என்னவென்றால், அவளுக்கு திருமணமாகி விட்டது. அவள் வயது 22. திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் சென்ற பின் தான், முதன் முதலில் அவளைப் பார்த்தேன். முதலில் இதை இனக்கவர்ச்சி என்று நினைத்தேன். ஆனால், அப்படியேதும் இல்லை என்று, நிச்சயமாக சொல்ல முடியும். அவளுடைய கணவன் கொஞ்சம் முன்கோபி. அதனால், அடிக்கடி அவளுக்கு அடி விழும். அவளை அரவணைக்க ஆள் இல்லாததால் தான், என்னை விரும்புகிறாளோ […]

யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன்

0
FB IMG 1736392246506.jpg

யாழில் சொந்தத் தாயை தொடர்ச்சியாக பாலியல்ரீதியில் சித்திரவதை செய்து வரும் 17 வயதுச் சிறுவன் தொடர்பான தகவல்களை பெண் வைத்தியர் ஒருவர் விழிப்புணர்வுக்காக ஊடகவியலாளர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த தாயார் தனது மகனால் பாலியல்ரீதியில் சித்திரவதைப்பட்டு தொடை பகுதிகளில் கடிக்கப்பட்ட காயங்கள் மற்றும் கண்டல்களுக்காக சிகிச்சை பெற வந்த போதே இச் சம்பவம் தெரியவந்துள்ளது. குறித்த சிறுவனை உடனடியாக புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்ப வைத்தியர் முற்பட்ட போது தாயார் கும்பிட்டு மன்றாடி அவ்வாறு செய்ய வேண்டாம் என கூறிச் சென்றுள்ளாராம். வடமராட்சியில் பிரபல பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த சிறுவன் 15 வயதில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளான். அது தொடர்பாக பெற்றோருக்கு தெரியாமல் இருந்துள்ளது. இந் நிலையில் வீட்டில் இருந்த சில நகைகள் காணாமல் போனமை தொடர்பாக ஆராய முற்பட்ட போதே சிறுவன் தாய் மற்றும் சகோதரியால் பிடிக்கப்பட்டுள்ளான். அதன் பின்னரே சிறுவன் போதைப்பொருள் வாங்க பணம் பெறுவதற்காக நகைகளை போதைப்பொருள் […]

வடமராட்சி வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவான் விஜயகுமாரின் மகன் பலி !

0
FB IMG 1736383693006.jpg

வல்லைப் பகுதியில் நேற்று இரவு 7-30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் யா / நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தாவில் வித்துவான் வியஜகுமாரின் புதல்வன் உயிரிழந்துள்ளார் . யாழ் நகர் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இளைஞர் வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்து சம்பவம் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த பிரபல தாவில் வித்துவான் விஜயகுமார் மணிகண்டன் வயது 21 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் . சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வெருகலில் தொல்லியல் திணைக்களத்தால் நில அபகரிப்பு : மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !

0
WhatsApp Image 2025 01 08 at 1.10.08 PM 1 .jpeg

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் பொதுமக்கள் இன்று புதன்கிழமை (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெருகல் – வட்டவான் பகுதியில் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் அருகே கடந்த திங்கட்கிழமை (06) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பெயர் பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொல்லியல் எனும் பெயரில் பௌத்தமயமாக்கல் இடம்பெறமாட்டாது என்பதை உறுதிசெய்யுமாறு கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டவானின் தொல்லியல் பதாகை போடப்பட்டிருந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவனியாக சென்றனர். இதன்போது “தொல்லியல் திணைக்களமே புத்தர்சிலை வைக்க மாட்டோம் என்பதை உறுதிசெய்” “அநுரவின் ஆட்சியிலும் அபகரிப்பா?”, “அடுத்தது புத்தர் சிலையா? பௌத்த விகாரையா?”, “தொல்லியல் காணியில் விகாரை கட்டப்படாத இடம் உண்டா?” போன்ற வாசகங்களை ஏந்தியும், கோசங்களை […]

ரூ . 97 மில். கொக்கைனுடன் 66 வயது நபர் கட்டுநாயக்கவில் கைது

0
Screenshot 2025 01 08 13 43 14 590 com.facebook.katana edit.jpg

சட்டவிரோதமான முறையில் இன்று (08) இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ரூ. 97 மில்லியன் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளை தனது பயணப்பெட்டியில் மறைத்துக்கொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வெளிநாட்டவர் ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று (08) கைது செய்துள்ளனர். 66 வயதான குறித்த பொஸ்னியா பிரஜை கொலம்பியாவிலிருந்து குறித்த போதைப்பொருளுடன் பயணிக்கத் தொடங்கி கட்டாரின் டோஹாவுக்கு வருகை தந்துள்ளார். அதன்பின், அங்கிருந்து இன்று அதிகாலை 2.40 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். குறித்த நபரை சோதனை செய்த போது, அவரது பயணப் பொதிக்குள் கால்களை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் 114 பிரஷ்களுக்குள் 2 கிலோ 759 கிராம் கொக்கைன் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பொஸ்னியா பிரஜை மற்றும் […]

தகராறில் தனது நண்பனின் காலை இரண்டாக வெட்டியவர் கைது !

0
1726882320 Arre L.jpg

பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றின் போது இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இரு நண்பர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறின் போது, சந்தேக நபர் மன்னா கத்தியால் தனது நண்பனின் காலை இரண்டாக வெட்டி எடுத்துள்ளார். காயமடைந்த நண்பன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேக நபரான பாணந்துறை – பின்வத்தை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மன்னா கத்தி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ !

0
Nalinda Jayathissa.webp.jpeg

நாட்டிலுள்ள போலி வைத்தியர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான நபர்கள் தொடர்பில் தகவல்கள் இருந்தால் அதனைச் சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகத்துக்கோ அல்லது வேறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கோ பொதுமக்கள் அறிவிக்க முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சட்டவிரோதமாக இயங்கும் போலி வைத்தியர்களை இனங்காண்பதற்காகச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹண பண்டார எழுப்பிய கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக சமூகத்திலிருந்து அறிய முடிகிறது எனினும், அந்தளவு பெருந்தொகையான வைத்தியர்கள் உள்ளார்கள் என்பதை நம்ப முடியாமல் உள்ளது. எனினும் குறிப்பிடத்தக்க அளவு போலி வைத்தியர்கள் நாட்டில் இயங்குகின்றார்கள் என்பதைக் குறிப்பிட முடியும். உத்தியோகப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாமல் வைத்தியர்கள் என்ற பெயரில் செயற்படும் வைத்தியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அவ்வாறான நபர்கள் தொடர்பில் […]

குடும்ப மீளாய்வுக்காக சென்றிருந்த மதகுரு மீது தாக்குதல்

0
GridArt 20250108 103030111 scaled.jpg

கிளிநொச்சி – கனகாம்பி கைகுளம் கிராம அலுவலரிடம் குடும்ப மீளாய்வுக்காக சென்றிருந்த மதகுரு மீது நேற்று தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த மதகுரு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அருட் கலாநிதி றமேஸ் அமதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் சம்பவம் தொடர்பாக கூறுகையில், மதகுருக்கள் பலவாறு அவமதிக்கப்படுவதையும், தாக்கப்படுவதையும் சமகாலத்தில் நாம் காண்கிறோம். உயர் கலாசார மற்றும் பாரம்பரிய ஒழுக்க விழுமியங்கள் கட்டிக்காக்கப்படும் கிளிநொச்சி மண்ணில் நடந்த இந்த அநாகரிக செயலுக்கு கிளிநொச்சி சர்வ மத தலைவர்கள் சார்பில் கவலை தெரிவிக்கிறேன். இத்தகைய செயற்பாடுகள் இனியும் இடம்பெறா வண்ணம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சுண்ணக்கல் வாகன விவகாரம்.. வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம்.

0
FB IMG 1736312091314.jpg

வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம்.. கடிதங்கள் மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை சட்டமாக ஏற்கமுடியாது … சட்டத்தரணி கலாநிதி குருபரன் மன்றில் வாதம் வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம். சாவக்கச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் வழிமறிக்கப்பட்ட சுன்னக்கல் ஏற்றிய கனகர வாகனத்தை 5 இலட்சம் ரூபா பிணை முறியில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் விடுவித்தது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது கடந்த வாரம் சாவ கச்சேரி பகுதியில் இரவு வேளை கனகர வாகனத்தில் சுண்ணக்கல் ஏற்றிச் செல்லப்படுவதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனத்தை வழிமறித்திருந்தார். அச்சமயம் வாகன சாரதிக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் குறித்த பொருளை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதி தொடர்பான வாய்த் தர்க்கம் மேற்பட்ட நிலையில் பொலிசாரின் தலையீடு காரணமாக குறித்த வாகனம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. குறித்த விடயம் ஊடகங்களுக்கு அப்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் […]

வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை !

0
BATTINEWS202.jpg

ஜனாதிபதியின் க்கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியினை தடுக்கும் வகையில் வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் பாரிய கசிப்பு வேட்டை நேற்று திங்கள் (6) இரவு மேற்கொள்ளப்பட்டது. கிராமசேவகர் க.கிருஷ்ணகாந்தின் வழிகாட்டலில் பொலிசாரின் ஒத்துழைப்புடன் பிரதேச மில்லர் விளையாட்டுக் கழக இளைஞர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இணைந்து இவ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது 100 லீற்றர் கசிப்பு,30 லீற்றர் கோடா,10 வெற்று வரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டு அவற்றினை பொதுமக்கள் முன்னிலையில் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.தகவல் அறிந்த சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் எவரும் கைது செய்யப்படவில்லை.அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். நீண்ட காலமாக கிண்ணையடி கிராமத்திற்கு அப்பாற்பட்ட ஆற்றினை அண்மித்த பிரதேசங்களில் இவ் சட்ட விரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கை இடம்பெற்று வந்தது.இதனை தடுக்க எவரும் துணிந்து முன்வராத நிலைமை காணப்பட்டது. இதனால் பிரதேசத்தில் […]