வழி மறிக்கப்பட்ட சுண்ணக்கல் வாகன விவகாரம்.. கடிதங்கள் மூலம் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை சட்டமாக ஏற்கமுடியாது … சட்டத்தரணி கலாநிதி குருபரன் மன்றில் வாதம் வாகனம் மற்றும் கற்களை பிணைமுறியில் விடுவித்த நீதிமன்றம். சாவக்கச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் வழிமறிக்கப்பட்ட சுன்னக்கல் ஏற்றிய கனகர வாகனத்தை 5 இலட்சம் ரூபா பிணை முறியில் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் விடுவித்தது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது கடந்த வாரம் சாவ கச்சேரி பகுதியில் இரவு வேளை கனகர வாகனத்தில் சுண்ணக்கல் ஏற்றிச் செல்லப்படுவதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குறித்த வாகனத்தை வழிமறித்திருந்தார். அச்சமயம் வாகன சாரதிக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் குறித்த பொருளை எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதி தொடர்பான வாய்த் தர்க்கம் மேற்பட்ட நிலையில் பொலிசாரின் தலையீடு காரணமாக குறித்த வாகனம் பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. குறித்த விடயம் ஊடகங்களுக்கு அப்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் […]